20இக்கு கை உயர்த்தியவர்களுக்கு சிக்கல்?

265 0

20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட வேட்புமனு வழங்கக்கூடாதென அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் இம்ரான் மஹ்ரூப் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ள அவர், கடந்த பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சி சார்பாக போட்டியிட்ட முஸ்லிம் கட்சிகளின்  பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்டனர். ஆனால் அவர்களின் கட்சி தலைவர் மட்டும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எந்த ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் எமது வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்று, கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்தவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட வேட்புமனு வழங்கக்கூடாது என எமது கட்சி ஆதரவாளர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் முஸ்லிம்களின் நிலைப்பாடும் இவ்வாறே உள்ளது என நினைக்கிறேன். ஆகவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால செயற்பாடுகள் எதிலும் இணைத்துக்கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளார்.