அச்சமின்றி போராட்டங்களை முன்னெடுங்கள் – மனுசநாணயக்கார ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு செய்தி

144 0

காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துள்ள ஆர்;ப்பாட்டம் காரணமாக அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளிற்குள் முடங்கியிருக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு அரசியல் ரீதியான நோக்கங்கள் மனதில் இல்லாதபோதிலும் அவர்களிற்கு எந்தஉதவியையும் செய்ய தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தற்போது மறைந்துவாழும் ராஜபக்சாக்கள் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அச்சப்படதேவையில்லை என சமூக ஊடகத்தில் வீடியோ பதிவின் மூலம் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்கார மக்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் தங்கள் கருத்துக்களை வெளியிடவேண்டும் என தெரிவித்துள்ளார்.

சவால்கள் பல காணப்படுகின்ற போதிலும் அச்சமின்றி போராட்டத்தை முன்னெடுப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.