IMF உடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க திட்டம்

250 0

இலங்கையின் பொருளாதாரத்திற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் அலி சப்ரி சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின்போது, இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி  இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்