தாம் வசிக்கும் கொழும்பில் உள்ள வீட்டின் பெறுமதி 800 கோடி ரூபாய் என எதிர்க்கட்சிகள் சிலர் அவதூறாகப் பேசுவதாகவும், இது தமக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாகவும் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
800 கோடி ரூபாய் பெறுமதியான வீடு இலங்கையில் இல்லை எனவும், இந்த வீட்டை தமக்கு வழங்குவதற்கு அப்போதைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர்கள் கூறுவதாகவும் மைத்திரி தெரிவித்தார்.

