பசில் ராஜபக்ஸவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

214 0

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கம்பஹாவில் உள்ள    பசிலுக்கு சொந்தமான காணி தொடர்பான வழக்கில் சட்டமா அதிபரின் அறிவுரை இதுவரை பெறப்படாமை காரணமாக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பசிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் கம்பஹா , ஒருதொட பகுதி காணி தொடர்பான வழக்கு  நேற்றையதினம் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  போது வழக்கு தொடா்பில் இதுவரை சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவில்லை என தொிவித்த   நீதிமன்றம்  விசாரணையை  மே 5ம் திகதிவரை ஒத்திவைத்துள்ளது.