நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் எரிபொருள் வழங்கப்படாமையினால் பிரதான வீதியை மறித்து, எரிவாயு வழங்குமாறு கோரி கொட்டும் மழையிலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த போராட்டமானது இன்று (09) திருகோணமலை தபால் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்றுவருகின்றது.
இன்று காலை 6 மணி முதல் எரிவாயு வழங்கப்படும் என கடை உரிமையாளர் கூறியதை அடுத்து மக்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளனர்.
இதனையடுத்து இன்று மாலை வரை எரிவாயு கிடைக்கவில்லை என மக்கள் தெரிவித்து பிரதான வீதியினை எரிவாயு கொள்கலன்களுடன் இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



