பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் நியாயமானவை – ரஞ்சன்

233 0

பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் நியாயமானவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

சிறை வாழ்க்கை கடினமானது, ஆனால் தற்போது மக்கள் படும் துன்பம் மிகப்பெரியது எனவும் குறிப்பிட்டார்.

“பொதுமக்களின் எதிர்ப்பு நியாயமானதும் சரியானதுமாகும். நான் அறிக்கைகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதால், நான் பேச அனுமதிக்கப்படவில்லை,” என்றார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.