ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைக்கு ஆயுள் தண்டனை

196 0

இலங்கையில் 2018 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2018 அக்டோபர் மாதம் கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.  பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த குறித்த பிரஜைக்கு ஆயுள் தண்டனை வழங்கி கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 643 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் ஹெரோயின் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்டமை தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.