பட்டினிச்சாவை நோக்கி நகர்கின்றது நாடு : மன்னாரில் அரசிற்கு எதிராக கண்டன போராட்டம்

332 0

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று(7) காலை 9.30 மணிக்கு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசின் தூர நோக்கற்ற நிதி நிர்வாக முகாமைத்துவத்தால் நாடு பெரும் பொருளாதார பின்னடைவை எதிர் நோக்கி பட்டினிச்சாவை நோக்கி நகர்கின்றது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், எரிவாயு மற்றும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இச் செயலைக் கண்டித்துக் குறித்த கண்டன போராட்டம் இடம் பெற்றது. குறித்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “கோட்டாபயவே வெளியேறு”,குடும்ப ஆட்சி வேண்டாம்”, ”மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கே கொடு” போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery