ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

235 0

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

அதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது.

கடந்த மாதம் 23-ந்தேதி ராமேசுவரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 29-ந்தேதி மேலும் 4 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவர்களது நடவடிக் கையை கண்டித்து கடந்த மாதம் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ராமேசுவரம் மீனவர்கள், நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதனால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் ராமேசுவரம் துறை முகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமே சுவரம் மீனவர்கள் அடுத் தடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழி லாளர்களும் வேலை இழந்து தவித்து வருகின்றனர். மீனவர்கள் மற்றும் மீன் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி முதல் மீன்பிடி தடை காலம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.