சொத்து வரி உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வருகிற 10-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு கண்டனம் கூட்டம் நடைபெற உள்ளது.அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வீடுகளுக்கான சொத்து வரியை 100 சதவீதம் வரையிலும், வணிக இடங்களுக்கான சொத்து வரியை 150 சதவீதம் வரையிலும் கொஞ்சமும் மனசாட்சியின்றி உயர்த்தியிருக்கிறார்கள்.
இதனைக் கண்டித்தும், சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தெருமுனை கண்டன கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. வருகிற 10-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு நடைபெறவுள்ள இக்கூட்டங்களில், விடியல் ஆட்சி தரப்போவதாக கூறி பதவிக்கு வந்த தி.மு.க.வின் உண்மை முகத்தை தமிழக மக்களிடம் தோலுரித்து காட்டுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

