நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை – ரமேஷ்

162 0

hநாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய நிலைமையில் அரசாங்கத்தின் நிதி நிலைவரம் இல்லை. தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகளை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதற்காக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண கோரிக்கை விடுத்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஊடகங்களும் நாட்டில் நெருக்கடிகள் மாத்திரமே காணப்படுவதைப் போன்று செய்திகளில் காண்பிக்கின்றன.

அத்தோடு கொழும்பில் திங்களன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் பஸ் ஒன்றும் முடக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இது எதிர்காலத்தில் நாட்டின் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடிகளை தோற்றுவிக்கும்.

முழு நாடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் ஊடகங்கள் , பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.