போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

205 0

தங்கல்லை பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை வீரகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்ததெமலிய பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை விசாரணைக்குட்படுத்தியதில் போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் 11 மற்றும் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.