சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

243 0

 

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்     மேற்கொண்டு  சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை 9.00 மணிக்கு, நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து 4 மணிவரை நடைபெற்றது.

குறித்த போராட்டத்தை யாழ்ப்பாண மாவட்ட காணாமல்போனோரின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆரம்பித்துள்ள சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்நிலையில் வவுனியாவில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்திலுள்ள காணாமல் போனோரின் சங்கத்தினரால் இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.