புகையிரதம் மீது சித்திரம் வரைந்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது!

214 0

புகையிரதத்தின் மீது சட்டவிரோதமாக சித்திரங்கள் வரைந்த இரு வெளிநாட்டுபிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவை சேர்ந்தவர்களே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாத்தறை புகையிர நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் புகையிரத்திலேயேசித்திரம் வரையப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் மாத்தறை பொலிஸாரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது,ஒரு பொழுதுபோக்குக்காகவே சித்திரங்கள் வரைந்தோம் என அவர்கள்பதிலளித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களிடம் இருந்த கேமரா, நிறப்பூச்சிகள் , தூரிகைகள் மற்றும்மோட்டார் வாகனம் ஆகியன பொலிஸ் தடுப்பு காவலில் உள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.