2022-23-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்

185 0

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தமிழகத்தின் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்த நிலையில், இன்று எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
* வேளாண் துறைக்கு மொத்தமாக 33,007 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பசுந்தீவனங்களை உற்படுத்தி செய்ய நிதி ஒதுக்கீடு
*  காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களை சீரமைக்க 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*  புதிய நீர்வழிப்பாதை மேம்பாடு 2.0 திட்டம்
*  உழவர் சந்தைகளில் மாலை நேரத்தில் சிறுதானியங்கள் விற்பனை செய்யவும் நடவடிக்கை
* 38 கிராமங்களில் 95 கோடி ரூபாய் மதிப்பில் சந்தைப்படுத்துதல் மையம்
* பம்பு செட்டுகள் இயக்க தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் பாம்பு கடித்து இறப்பதை தடுக்க, தானியங்கியாகவோ அல்லது செல்போன் மூலமாக பம்பு செட்டுகளை இயக்கும்  திட்டம் ₹5 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
* வேளாண் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
* நடமாடும் பழுது நீக்கும் மையம் அமைக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
* சிறு அளவிலான தொழில் உருவாக்கும் மையங்கள் அமைக்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* இலவச தென்னங்கன்று வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு
* தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை மையங்கள் அமைக்கப்படும். அண்டை மாநில வணிகர்கள் இங்கு நேரடியாக கொள்முதல் செய்ய வசதி ஏற்படுத்தப்படும்
* அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு ₹5 கோடி ஒதுக்கீடு
* தக்காளி விலையை சீராக்க உற்பத்தி குறைவாக உள்ள மாதங்களில், உற்பத்தியை அதிகரிக்க மானியம்
* பயிர்களில் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த 5 கோடி ரூபாய் சிறப்பு நிதி
*  ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 4 ஆயிரம் வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்கப்படும்
*  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம்
* பனை மரம் ஏறும் கருவிகளை கண்டுபிடித்து தருபவர்களுக்கு விருது வழங்கப்படும்
* மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்
* 50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ. 15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு
*  தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு 38,000 ஏக்கர் பரப்பளவில் ரூ. 27.51 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும்
* தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க 37 தேனீ தொகுப்புகள் ரூ. 8.51 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்
* உழவர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில், தனி இணைய முகப்பு உருவாக்கப்படும்
* காய்கறி உற்பத்தியை அதிகரிக்க  5 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு திட்டங்கள்
* மலர் சாகுபடியை அதிகரிக்க 5 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
* வேளாண் துறையிலும் மின்னணு வேளாண் திட்டம் ஏற்படுத்தப்படும்.
* சொட்டு நீர் பாசன திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசின் நிதி பங்களிப்பில் 960 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* 2022-23-ம் ஆண்டில் 19 லட்சம் ஹெக்டேரில் ரூ. 32.48 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நெல் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும்
* ஊரக வளர்ச்சி துறை மூலம் பண்ணைக் குட்டைகள் அமைக்க, தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகளுக்கு 1245 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
* சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* நீடித்த நிலையான பருத்தி இயக்கம் ரூ. 15 கோடியில் செயல்படுத்தப்படும்
* கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 195 ரூபாய் வழங்கப்படும்
* விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவுக்கு 5157 கோடி ரூபாய் வழங்கப்படும்.
* சிறுதானிய திருவிழா மாநில மற்றும் மாவட்ட அளிவில் நடத்தப்படும்.
* எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் நிதி
* 381 கோடி ரூபாயில் 3 உணவு பூங்கா
* மண் வளத்தை அறிந்த கொள்ள தமிழ் மண் வளம் இணைய முகப்பு தொடங்கப்படும்
* 12 கோடி ரூபாயில் மரம் வளர்ப்பு திட்டம்
* எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* ஆடு,மாடு, கோழி உளளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை உஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* 2500 இளைஞர்களுக்கு விவசாய திறன் பயிற்சி
* துவரை சாகுபடி சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும்
* சிறுதானிய உற்பத்தியை ஊக்கப்படுத்த இரண்டு சிறப்பு மண்டலங்கள்
* வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.
* இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதி
* நெல்லுக்குப் பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட 10 கோடி
நிதி
* மானியத்தில் வேளாண் கருவி வழங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 3 லட்சம் விவசாயிகள் மீண்டும் விவசாயம் செய்ய, 154 கோடி ரூபாய் இடுபொருள் மனியம் வழங்கப்பட்டுள்ளத.
* விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க நிதி
* பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு 59 மெட்ரிக் டன் விதை நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
* மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 71 கோடி ஒதுக்கீடு
* 2020-21-ம ்ஆண்டில் 9.26 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்படைந்துள்ளனர்.
* 2021-22-ம் ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கராக நெல் சாகுபடி உயர்ந்துள்ளது. 4.86 ஆயிரம் ஏக்கர் முந்தைய ஆண்டை விட அதிகமாகும்.
* குறுவை சாகுபடியால் டெல்டா விவசாயிகளின் வருமானம் உயர்ந்துள்ளது. இது 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சாதனை
* காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் பயிர் வகைகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
* முதல் வேளாணை்மை பட்ஜெட்டின் 86 அறிவுப்புகளுக்கு 80-க்கு அரசாணை வெளியிடப்பட்டது.