தாய் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி – குழந்தை பலி

272 0

அனுராதபுரம் - வன்னியங்குளம் பிரதேசத்தில் தாயொருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதன் போது தாய் காப்பற்றப்பட்டுள்ள போதிலும் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பெண் அவரது குழந்தையுடன் கிணற்றில் குதித்ததை அவதானித்த பிரதேச மக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் ஒருவயதும் 3 மாதங்களுமுடைய குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது