தொடரும் சரிவு: தமிழகத்தில் புதிதாக 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

129 0

சென்னையில் இன்று அதிகபட்சமாக 47 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 147 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரம் 151-ஆக பதிவாகி இருந்தது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,51,318 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று அதிகபட்சமாக 47 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1903-ஆக குறைந்துள்ளது. 387 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

கொரரோனா தொற்று பாதிப்பினால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,021 ஆக உயர்ந்துள்ளது.