உசிலம்பட்டி, ஆம்பூர் தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்- துரைமுருகன் அறிவிப்பு

166 0

உசிலம்பட்டி செயலாளர் எஸ்.தங்கமலைப்பாண்டி, ஆம்பூர் நகர செயலாளர் எம்.ஆர். ஆறுமுகம் மற்றும் எஸ்.எம். ‌ஷபீர் அகமத் ஆகியோரை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் நகர பொறுப்பாளர் சி.முருகன், உசிலம்பட்டி செயலாளர் எஸ்.தங்கமலைப்பாண்டி, உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் இ.சுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை எம்.ரவிக்குமார், உசிலம்பட்டி நகர இளைஞர் அணி அமைப்பாளர் மொ.சந்திரன்- வேலூர் மேற்குமாவட்டம், ஆம்பூர் நகர செயலாளர் எம்.ஆர். ஆறுமுகம் மற்றும் எஸ்.எம். ‌ஷபீர் அகமத் ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.