முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை

224 0

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் தங்கவேலு நிமலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்பளித்துள்ளது.

சுமார் 2 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளை (RDX) வைத்திருந்த குற்றத்துக்கு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அவருக்கு எதிராக 2011ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதேவேளை அவர் மீது மேலும் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

2007 மே 28ஆம் திகதி இரத்மலானையில் சிறப்பு அதிரடிப் படையினர் பயணித்த ட்ரக் மீது கிளைமோர் தாக்குதல்.

2009 பெப்ரவரி 7ஆம் திகதியன்று குருநாகல் மாலிகாபிட்டி மைதானத்தில் தேர்தல் பேரணியின் போது மேடைக்கு அருகில் வெடிகுண்டு வெடித்து அப்போதைய ஜனாதிபதியை படுகொலை செய்ய முயற்சித்தது.

2009 மார்ச் 13ஆம் திகதி அக்குரஸ்ஸ, கொடபிட்டியவில் தேவாலய விழா ஒன்றில் தற்கொலை குண்டுதாரி மூலம் அமைச்சர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் உள்பட 46 பேரை படுகொலை செய்யவும், அன்றைய ஜனாதிபதியை வெடிகுண்டு வீசி படுகொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரணைகளில் உள்ளன