தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

366 0

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல் தொடர்பாக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையாளர் ஆகியோர் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் அத்துமீறல் குறித்து பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது. ஊடக பதிவுகளின் படி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை நிகழ்த்திய அத்துமீறல் அப்பட்டமான மனித உரிமை மீறல் என தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த அத்துமீறல் குறித்து தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே சென்னை மெரினாவில் போராட்டம் நடைபெற்ற இடத்தை மாநில மனித உரிமை ஆணையர் உறுப்பினர்கள் மஞ்சுளா, கோபிநாத் மற்றும் காவல்துறை கூடுதல் இயக்குநர் ஆகியோர் பார்வையிட்டனர்.