இதயங்களை ஒன்றிணைக்கும் கிராமிய பாலத்துக்கு அடிக்கல்

158 0

பெரிய கல்லாற்றில் அமைக்கப்படவுள்ள  பாலத்துக்கான அபிவிருத்தி பணிகள், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனால் நேற்று (02) அடிக்கல் நாட்டப்பட்டது.

அரசாங்கத்தின் சுபீட்ஷத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக, இதயங்களை ஒன்றிணைக்கும் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இப்பாலம் அமைக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனில் முன்மொழிவுக்கு அமைவாக கிராமிய வீதி அபிவிருத்தி உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது.

பெரியகல்லாறு, அன்னை வேளாங்கன்னி தேவாலயத்துக்குச் செல்லும் வீதியில் மிக நீண்டகாலமாக சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட பாலமே  ஒன்றரைக் கோடி ரூபாய் செலவில் அப்பகுதி மக்கள் இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே பாலம் அமைக்கப்படுகின்றது.