முள்ளிவாய்க்காலில் பெருமளவு கைக்குண்டுகள் மீட்பு

174 0

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் கிழக்கு சனசமூக மண்டபத்திற்கு அருகாமையில் நேற்று காணியை சுத்தம் செய்து கொண்டிருந்த பொதுமகன் ஒருவர் இதை கண்டுபிடித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த பகுதிக்குச் சென்ற முல்லைத்தீவு பொலிசார் அங்கு ஆய்வு பணியினை மேற்கொண்டபோது 176 கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், குறித்த பகுதிக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் உத்தரவு பெறும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.