A9 வீதியில் மாட்டுடன் மோதி விபத்து

368 0

கிளிநொச்சி – பளை A9 வீதியில்  இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

முல்லையடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், வீதியில் மாடு குறுக்கே சென்றதால் மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகினார்.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.