எரிபொருள் இன்மையால் பேருந்து சேவை 50 சதவீதமாக குறைவு

210 0

எரிபொருள் இன்மையால் 50 சதவீத பேருந்து சேவைகள் குறைவடைந்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

சில பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் இடையில் நிறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக தங்களது தொழில் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இன்மையால் பல வீதிகளில் பேருந்து சேவைகள் இடம்பெறுவதில்லை.

சில பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டுள்ளன.

இது கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் பாதிப்பாக அமையும்.

இவ்வாறான நிலை ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.