சீமெந்து தட்டுப்பாட்டை நீக்க விரைவில் நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் லசந்த

208 0

நாட்டில் கடந்த காலங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்து வந்தது. என்றாலும் தற்போது அந்த நிலைமை குறைவடைந்துள்ளது. அதேபோன்று சீமெந்தது மற்றும் பால்மாவுக்கு இருக்கும் தட்டுப்பாட்டை குறைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்போம் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹண பண்டார, நாட்டில் எரிபொருள் மற்றும் சீமெந்திக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக சீமெந்தி மூடை கறுப்பு சந்தையில் பாரிய விலை அதிகரிப்புக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இராஜங்கா அமைச்சர் மேற்கண்ட தகவலை கூறினார்.

அத்துடன் அம்பாந்தோட்டையில் சீமெந்து தொழிற்சாலை அடுத்த மாதம் 7ஆ ம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது. அதன் பிறகு அங்கிருந்து மாதத்துக்கு 3 மில்லியன் மூடை சீமெந்து சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.