‘பிரபாகரன் சந்தர்ப்பங்களை தவறவிட்டவர்’ – டக்ளஸ் தேவானந்தா

219 0

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, அரசிடம் பேரம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்த போதும், அவர் அதனை பயன்படுத்தவில்லை” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார்.

“அரசிடம் பேரம் பேசும் சந்தர்ப்பம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த போதும் அவர்கள் அதனை பயன்படுத்தவில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அச்சந்தர்ப்பம் பல முறை கிடைத்தது.

ஆனால் சுயலாபத்துக்காக அவர் அதனை பயன்படுத்தவில்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தம், பிரேமதாச, சந்திரிக்கா, மஹிந்த, ரணில் ஆகியோருடன் பேச பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அவர் சுயலாபத்துக்காக அவர்களுடன் பேசவில்லை” என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.