சென்னை வீதிகளுக்கு சீல – இளைஞர்கள் விரட்டியடிப்பு

252 0

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை விரட்டிக்கும் தமிழக காவல்துறையினர், சென்னையில் மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து வீதிகளைம் மூடி சீல் வைத்துள்ளனர்.

மெரினா கடற்கரையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டுள்ள இளைஞர்கள், ராயப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள வீதிகளில் குவிந்துள்ளனர்.

அவர்கள் மீண்டும் கடற்கரை பகுதிக்கு செல்லாமல் இருக்க காவல்துறையினர், அனைத்து வீதிகளுக்கும் சீல் வைத்துள்ளனர்.

கடற்கரை வீதியுடன் இணையும் பாதைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வேளச்சேரியில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் மேம்பால ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.