பேக்கரி தயாரிப்புக்களுக்கான விலை அதிகரிக்க வாய்ப்பு

239 0

545210119Untitled-1வருங்காலத்தில் பேக்கரி தயாரிப்புக்களுக்கான விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

பேக்கரி தயாரிப்புக்களுக்கு பயன்படுத்தும் பொருட்களுக்கான விலையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பேக்கரி உரிமையாளர்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் பேக்கரி தயாரிப்புக்களுக்கு பயன்படுத்தும் பொருட்களுக்கான வரிச் சலுகைகளை வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாகவும் ஜெவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.