யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து ஆரம்பம்

244 0

6யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து படகு சேவை  புதிதாக உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

நேற்று காலை 8.30 க்கு புங்குடுதீவு – குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து ‘நெடுந்தாரகை’ என நாமகரணப்படுத்தப்பட்ட பயணிகள் படகு தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்தது.

இந்த நிகழ்வில் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண
சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுமார் 80 பயணிகள் பயணிக்க கூடிய வகையில் இந்தப் படகு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கம் என்பன இணைந்து வழங்கிய 15 கோடி ரூபா செலவில் இந்தப் படகு நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 4 5 6 8 9