ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நெல் களஞ்சிய சபைக்கு உத்தரவு

232 0

maithiripalaஅரசாங்க களஞ்சியசாலைகளிலிருந்து விநியோகிக்கப்பட்ட நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நெல் களஞ்சிய சபைக்கு இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை 76 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்ய முடியாது என்றும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அரிசியை இறக்குமதி செய்யும்போது நுகர்வோருக்கு பொருத்தமான அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமது தனிப்பட்ட கோரிக்கைக்கு அமைய 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை எதிர்வரும் சில வாரங்களுக்குள் இலங்கைக்கு வழங்க இந்தோனேசியா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.