சட்டப்பூர்வ அந்தஸ்துடன் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு

238 0

RavishankarPrasad2தமிழகத்தில் சட்டப்பூர்வ அந்தஸ்துடன் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு சட்டப்பூர்வ அனுமதி கிடைக்க தமிழக அரசு முன்னெடுத்துள்ள முயற்சிகளை மத்திய அரசு ஆதரிக்கிறது.

இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணையமைச்சர் அனில் மாதவ் தவே, அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினேன்.

பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷாவுடனும் விவாதித்தேன்.ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் தமிழக ஆளுநர் கையெழுத்திடுவார். அதன்பிறகு, சட்டப்பூர்வ அந்தஸ்துடன் ஒரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என நம்புகிறேன் என்றார்.