திருமலை கல்லூரி ஒன்றில் இன்று பெரும் குழப்ப நிலை

264 0
திருகோணமலையிலுள்ள பிரபல பெண்கள் கல்லூரி ஒன்றில் சில வருடங்களுக்கு முன் ஹபாயா விவகாரம் தொடர்பில் பிரச்சினை எழுந்த நிலையில் இன்று மீண்டும் அவ்விவகாரம் மாணவர்கள் -ஆசிரியர்கள்- பெற்றோர் மத்தியில் பூதாகரமாக மாறியுள்ளதாக அறிய வருகிறது.
இன்று ஓர் ஆசிரியை முகத்தை முழுவதுமாக மறைத்து ‘ஹபாயா’ அணிந்து பாடசாலைக்கு வந்த நிலையில் மாணவர்களும் பெற்றோரும் இதை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதை குறித்த ஆசிரியை காணொளிப் பதிவு செய்துள்ள தாகவும் அதைத் தடுக்க அதிபர் தலையீடு செய்ததை யடுத்து அதிபரை குறித்த ஆசிரியை தள்ளி விட்டதாக வும் இதையடுத்து கீழே விழுந்து மயக்கமடைந்த அதிபர் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.