ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் மோசடிகள் – கபிர் ஹாசிம்

303 0

bf710e939e84f007a2f68088a1bafb8a_XLஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் மோசடிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் கபிர் ஹாசிம் ஒப்புக்கொண்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் கருத்து தெரிவிக்கையில்,விமான சேவை நிறுவனத்தில் ஓர் மாபீயா இயங்கி வருகின்றது என்பதனை ஒப்புக்கொள்கின்றேன். இந்த விடயம் குறித்து துரித கதியில் விசாரணைகள் நடத்தப்படும்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றன. இந்த சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை பிழையாக வழிநடத்தும் நோக்கில் அண்மையில் எனக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தனர்.இந்த முறைப்பாடு ஓர் பொய்யான முறைப்பாடாகும் என அமைச்சர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.