மட்டக்களப்பில் கடும் மழை

288 0

gநீண்ட வறட்சிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருகின்றது.

இதனால் வறட்சிக்குட்பட்டிருந்த பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.இன்று 10.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இம்முறை இம்மாவட்டத்தில் 1 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தபோதிலும் இதில் பெருமளவிலான நெல்வயல்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.தொடர்ந்தும் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது