மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மாபெரும் பொங்கல் விழா(காணொளி)

341 0

manmunaiஉழவர் திருநாளை முன்னிட்டு மாபெரும் பொங்கல் விழா இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராமிய சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் உழவர் திருநாளை முன்னிட்டு 110 பானைகள் கொண்டு பொங்கல் விழாவும் பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வுகளும் இன்று காலை நடைபெற்றன.

மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்றது.
பொங்கல் விழா சிறப்பு பூசைகள் பிரதேச செயலக வளாக ஆலயத்தில் இடம்பெற்றதை தொடர்ந்து பாரம்பரிய கலை கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமிய அபிவிருத்தி சங்கம், மாதர் அபிவிருத்தி சங்கம், சிரேஷ்ட பிரஜைகள் சங்கம், சமுர்த்தி சங்கம், மாதர் சங்கம், சிறுவர் கழகம், கிராம மட்ட சிவில் குழுக்கள் ஆகியன இணைந்து பொங்கல் விழாவை வெகுசிறப்பாக சிறப்பித்தனர்.