சரத் குமார குணரத்னவுக்கு பிணை

253 0

sarathkumara-01நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

சரத் குமார குணரத்னவை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 2ஆம் திகதி கைதுசெய்தனர். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 10 இலட்சம் ரூபா பெறுமதியில் இரண்டு சரீரப்பிணையிலும் அவரை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டார்.