நாட்டின் பல பாகங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும்- வளிமண்டலவியல் திணைக்களம்

263 0

downloadநாட்டின் பல பாகங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் காலநிலையில் இன்று முதல் மாற்றம் நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு வடமத்திய மாகாணம் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் வறட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியம், சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழையும் ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் சில பிரதேசங்களிலும் பனிமூட்டமான காலநிலை காணப்படும் எனவும், நாட்டில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.