தமிழக முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்

255 0

201701201544599992_Statement-of-TN-CM-has-come-as-a-relief-MK-Stalin-DMK_SECVPFஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இன்னும் ஒரிரு நாட்களில் அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்து இருந்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திமுக தலைமை தாங்கி பல்வேறு போராட்டங்களை நடத்தி கொண்டு வருகிறது. இளைஞர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தினை பாராட்டுகிறேன். தமிழக முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக உள்ளது” என்றார்.
முன்னதாக, ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.