மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா (காணொளி)

281 0

battiதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா இன்று பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.துரைரட்ணசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான மாபெரும் பொங்கல் ஊர்வலம், அரசடி தேவநாயகம் மண்டபத்தைச் சென்றடைந்தது.

தமிழர்களின் கலாசார இன்னியம் இசையுடன் குறித்த கலாசார பவனி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா இன்று பிற்பகல் மட்டக்களப்பில்
நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.துரைரட்ணசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான மாபெரும் பொங்கல் ஊர்வலம், அரசடி தேவநாயகம் மண்டபத்தைச் சென்றடைந்தது.

தமிழர்களின் கலாசார இன்னியம் இசையுடன் குறித்த கலாசார பவனி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.