யேர்மனி டோட்முன்ட் நகரில் கேணல் கிட்டு உட்பட்ட பத்து மாவீரர்களின் 29 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு இன்றைய கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக அனுமதிக்கப்பட்ட மக்கள் தொகையுடன் சிறப்பாக நடைபெற்றது.இந் நிகழ்வில் வருகைதந்திருந்த மக்கள் கேணல் கிட்டு உட்பட்ட பத்து மாவீரர்களுக்கும் தீபம் ஏற்றி, மலர்தூவி வீர வணக்கத்தைச் செலுத்தினர். மற்றும் நடனாஞ்சலி, கவிதாஞ்சலி, சிறுவர்களின் எழுச்சிப்பாடல்கள் என்பனவும் நடைபெற்றது. இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் நம்பிக்கைப் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
கம்பேர்க் தமிழாலயத்தில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட்ட பத்து மாவீரர்களின் நினைவு வணக்க ஒளிப்படங்கள்.