அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி விடுதலைப் பொங்கல்

198 0

அரசியல் கைதிகளின் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல் இன்று காலை 11 மணியளவில் யாழ். முற்றவெளியில் இடம்பெற்றது.சிறைக் கூண்டு போன்ற மாதிரி வடிவமைக்கப்பட்டு அதற்குள் பொங்கல்  செய்து  போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது அரசியல் கைதிகளின் உறவுகள், மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.