பொருத்து வீடுகளுக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்

240 0

sundaramபொருத்து வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 3 பேர் கடந்த 13ஆம் திகதி வரை தமது விருப்பங்களைத் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இதனை தெரிவித்துள்ளார்,
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேற்றப்பட்ட மக்களில் 16 ஆயிரத்து 119 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டிய தேவைகள் உள்ளன.

இன் நிலையில் மீள் குடியேற்ற அமைச்சின் பொருத்து வீட்டுத்திட்டத்தில் பயனாளிகளை இணைந்து கொள்வதற்கு எமது மாவட்டத்திற்கு 11, ஆயிரம் விண்ணப்ப படிவங்களை மீள் குடியேற்ற அமைச்சு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதிக்குள் விடுமுறை தினங்கள் அதிகம் வந்துள்ளமையால், விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய மீள் குடியேற்ற அமைச்சினால் நாளை மறுதினம் வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிகர் தெரிவித்தார்.