நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் சீனா எப்போதும் இலங்கை;கு ஆதரவளிக்கும்

445 0

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு;ள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தை கௌரவித்த ஜனாதிபதி இருநாடுகளிற்கும் இடையிலான வரலாற்றுரீதியில் நெருக்கமான உறவுகளை நினைவுகூர்ந்துள்ளார்.

கொவிட் பெருந்தொற்றின் போது சீன அரசாங்கத்திடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் கிடைத்த ஆதரவிற்காக ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மீண்டும் திரும்பிவந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் சீனா எப்போதும் இலங்கை;கு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசி திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக சீன அரசாங்கம் தொடர்ச்சியாக சினோபார்ம் தடுப்பூசியினை வழங்கியமைக்காக ஜனாதிபதி நன்றியை தெரிவித்துள்ளார்.

கொவிட்டினால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வின் ஒரு பகுதியாக கடனை திருப்பி செலுத்துவதற்கான திறன் குறித்து கவனம் செலுத்தினால் அது நாட்டிற்கு பெரும் நிம்மதியாக அமையும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கு மலிவுவிலையில் சந்தைகடனை வழங்கும் முறையை பெற முடிந்தால் தடைகள் இன்றி தொழில்துறையை நடத்துவது இலகுவாகயிருக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு சீன வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.