மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையில் வெல்வதற்கு சீனாவின் செல்வாக்கு முட்டுக்கட்டையாக விளங்கும்

141 0

எங்கள் அரசியல் உரிமைகளை மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையில் வெல்வதற்கு சீனாவின் செல்வாக்கு முட்டுக்கட்டையாக விளங்கும் – சீனா எங்கள் பகுதிகளில் கால்பதிப்பதை நாங்கள் விருப்பாததற்கு இது ஒரு காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மோர்னிங்கிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் சீனாவின் பிரசன்னத்தை நாங்கள் வரவேற்கவில்லை என நான் தெளிவாக தெரிவித்திருப்பதுடன் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளேன் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் அரசியல் அபிலாசை என்பது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாக கொண்டது – இந்த இரண்டு கருத்துக்களும் சீனாவிற்கு அந்நியமான விடயங்கள்,என தெரிவித்துள்ள சுமந்திரன் எங்கள் அரசியல் உரிமைகளை மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையில் வெல்வதற்கு சீனாவின் செல்வாக்கு முட்டுக்கட்டையாக விளங்கும் – சீனா எங்கள் பகுதிகளில் கால்பதிப்பதை நாங்கள் விருப்பாததற்கு இது ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது காரணம் நாங்கள் தென்சீன கடற்பகுதியில் இல்லை – தென்சீன கடற்பகுதியில் இருந்திருந்தால் நாங்கள் சீனாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளை அங்கீகரித்திருப்போம்,ஆனால் நாங்கள் இந்து சமுத்திர பகுதியில் இருக்கின்றோம்,இந்திய கரையிலிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் உள்ளோம்,என தெரிவித்துள்ள சுமந்திரன் இந்தியாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளை நியாப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பதற்காக எங்களை யாரும் குற்றம்சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
சீனா இந்தியாவுடன் நட்புறவு பாராட்டும் நாடு இல்லை ,இதன் காரணமாக இந்திய கரைக்கு மிக அருகில் உள்ள வடகிழக்கில் சீனா காலூன்ற அனுமதிப்பது– இந்தியாவிற்கு எதிராக மேலும் பகைமை நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதற்கு அனுமதிப்பதற்கு சமமானது. என தெரிவித்துள்ள சுமந்திரன் இதனை நாங்கள் செய்யக்கூடாது என நினைக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

இந்த காரணங்களிற்காக நாங்கள் வடக்குகிழக்கில் சீனாவை விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.