சென்னையில் மணலி மண்டலத்தில் அதிகபட்சமாக முதல் தவணை 151 சதவீதமும், 2-வது தவணை 122 சதவீதமும் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படுகிறது.
இதுவரையில் முதல் தவணை தடுப்பூசி 5 கோடியே 1 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 3 கோடியே 87 லட்சத்து 58 ஆயிரத்து 232 பேர் போட்டுக் கொண்டனர்.
2-வது தவணை 37 லட்சத்து 75 ஆயிரத்து 880 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது 68 சதவீதம் ஆகும். தடுப்பூசி போட தகுதி உள்ளவர்களாக 55 லட்சத்து 31 ஆயிரம் பேர் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் மணலி மண்டலத்தில் அதிகபட்சமாக முதல் தவணை 151 சதவீதமும், 2-வது தவணை 122 சதவீதமும் போடப்பட்டுள்ளது. மாதவரம் மண்டலத்தில் முதல் தவணை- 110, 2-வது தவணை 88 சதவீதம் பதிவாகி உள்ளது.
தனியார் மருத்துவமனைகள் மூலம் முதல் தவணை 6 லட்சத்து 86 ஆயிரத்து 653 பேருக்கும், 2-வது தவணை 4 லட்சத்து 95 ஆயிரத்து 236 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
மெகா தடுப்பூசி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.