கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூத்த விமானப்படை அதிகாரி கைது!

335 0

525212571Arrestகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டிற்காக இலங்கை விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.

இதன்போது அவரிடம் மேற்கொண்ட சோதனைகளின் போதே குறித்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.