லோதா குழுவின் பரிந்துரை அமுலாக்கம் குறித்து ஆராயும் குழு நாளை கூடுகிறது

246 0

lodha_1இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு லோதா குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அமுலாக்கம் சம்மந்தமான கண்காணிப்புக் குழு நாளை நியமிக்கப்படவுள்ளது.

இந்திய உயர் நீதிமன்றம் இந்த குழுவை நியமிக்கவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பரிந்துரைகளை அமுலாக்க தவறியமைக்காக கிரிக்கட் கட்டுப்பாட்;டு சபையின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை உயர் நீதிமன்றம் பதவி நீக்கியிருந்தது.

இதன்படி தற்போது பரிந்துரைகளின் அமுலாக்க நிலைமைகள் தொடர்பில் கண்காணிக்க இந்த குழு நியமிக்கப்படவுள்ளது.

இதேவேளை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள கிரிக்கட் சபையின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் மீண்டும் அந்த பதவிகளை பெறுவதற்கு சட்ட ரீதியான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.