கோண்டாவிலில் வன்முறை கும்பல் அட்டகாசம்

218 0

கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்துக்கு அண்மையாக உள்ள வர்த்தகரின் வீட்டு வளாகத்துக்கு புகுந்த கும்பல் ஒன்று, அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

அத்துடன், வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று, உப்புமடச் சந்தியில் போட்டு சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம், இன்று (23) அதிகாலை 5.15 மணியளவில், புன்னாலைக்கட்டுவன் சந்தியில் அலைபேசி வர்த்தக நிலையத்தை நடத்தி வருபவரின் வீட்டிலேயே, இடம்பெற்றுள்ளது.

3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஓட்டோவில் வந்த வன்முறைக் கும்பல், இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.