தற்போதைய நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் வரலாற்றில் முதன் முறையாக நெல் வயல்களுக்கும், விளைநிலங்களுக்கும் பொலிஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
நகைகள் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்கள் திருடப்படுவது தொடர்பில் பொதுமக்கள் அறிந்திருந்த போதிலும் தற்போது விளைநிலங்கள் உட்பட ஒவ்வொரு இடங்களிலும் திருட்டு சம்பவங்கள் பதிவாகி வருவதாக பி ஹரிசன் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் காய்கறிகள், முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் மேலும் அதிகரிக்கும்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் முட்டை ஒன்று ரூ.50க்கு விற்கப்படும் என்றும், ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.1,200-1,300 வரை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு கிலோ நாட்டரிசி சுமார் ரூ.300 ஆக உயரும் அதேவேளையில் சம்பா, கீரி சம்பா ரூ.500க்கு குறைவாக கிடைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
பொது மக்களால் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலையில், தற்போது விவசாயிகள் வேதனையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய ஏற்ற இறக்கம் திருட்டுகள் அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

